புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று வரை ரயில் சேவைகள் இயங்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், டிவியில் பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக, ஏப்., 14 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இது மே 3 வரை நீட்டிக்கப்படுகிறது. பிரிமீயம் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொங்கன் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து ரயில்களின் இயக்கமும், மே 3 நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.